• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இழுபறியில் இருந்த இரணைமடு சிறு போக செய்கைக்கு தீர்வு

இலங்கை

நீண்ட இழுபறியில் இருந்த இரணைமடு குளத்தின் கீழான சிறு போக செய்கைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் பாரிய நீர்ப்பாசனக்குளமாகிய இரணைமடு குளத்தின் கீழ், 2024ம் ஆண்டுக்கான சிறுபோக செய்கை சம்மந்தமான விசேட கலந்துரையாடல் நேற்று கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ். முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கரைச்சி பிரதேச செயலாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள மாவட்ட பிரதி ஆணையாளர், நீர்ப்பாசன பொறியியலாளர், இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தின் கீழ் உள்ள 22 கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 8ஆம் திகதி திங்கட்கிழமை மாவட்ட பதில் அரசாங்கதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் விவசாய அமைப்புக்களின் பிரதிநிகளுடனான கலந்துரையாடலையடுத்து சுழற்சி முறையில் 15560 ஏக்கர் செய்கை பண்ணுவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த சுழற்சி முறைக்கு  விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற  கலந்துரையாடலில் சுழற்சி முறையை தவிர்த்து பங்கீட்டு முறையில் வழமை போன்று செய்கை மேற்கொள்வதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply