• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரே நாளில் இரு தேர்தல்களையும் நடத்துவது சாத்தியமில்லை

இலங்கை

”ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமில்லை” என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூத்த அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில் ”இந்த நாட்டில் தேர்தல் நடத்தப்படுகின்ற முறைமையின் அடிப்படையில் இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது என்பது நடைமுறைச் சாத்தியம் அற்ற விடயமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கு நாடளாவிய ரீதியில் ஒரே ஒரு உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு மட்டுமே வழங்கப்படுவதாகவும்

ஆனால் பொதுத் தேர்தலுக்காக 22 தேர்தல் மாவட்டங்களுக்கு 22 வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், சில அரசியல் கட்சிகள் பொதுத் தேர்தலில் போட்டியிட்டதாலும், ஜனாதிபதித் தேர்தலில் வேறொரு வேட்பாளரை

ஆதரிக்கின்ற நிலை காணப்படுவதால் இது பல சிக்கல்களை உருவாக்கும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

மேலும் ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துமாறு இதுவரை எந்தக் கட்சியும் தம்மிடம் கோரவில்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply