• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி, முட்டையை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை 

இலங்கை

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளைத் தட்டுப்பாடு இன்றி விநியோகிக்க முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய , ஒரு கிலோ கோழி இறைச்சியை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என இலங்கை கால் நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்திய முட்டை இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் பண்டிகை காலத்தில் சுமார் நான்கு மில்லியன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply