• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்

இலங்கை

நீராடச் சென்ற பெண்ணொருவரை முதலை இழுத்துச் சென்றுள்ள நிலையில். அப் பெண் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் மீகலேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலங்குட்டிவ கால்வாயில் பதிவாகியுள்ளது.

குறித்த பெண் நேற்று (29) மாலை கால்வாயில் நீராடச் சென்ற போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட குறித்தப் பெண்ணை, பிரதேசவாசிகள் மீட்டு தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அப் பெண் உயிரிழந்துள்ளார்.

லிகொலவெவ, உஸ்கலசியம்பலங்காமுவ பிரதேசத்தில் வசித்த 66 வயதுடைய வயதிபப்பெண்ணொருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
 

Leave a Reply