• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடுகதி ரயிலில் மோதுண்டு இருவர் உயிரிழப்பு

இலங்கை

கண்டி ரயில்நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதுண்டு இருவர் உயிரிழந்துள்ளனர்

றாகம ரயில்கடவை மற்றும் றாகம துடுவேகெதர ஆகியபகுதிகளுக்கிடையில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சம்பவத்தில் றாகம ரயில்கடவை அருகில் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

மேலும் துடுவேகெதர பகுதியில் வைத்து ரயிலில் மோதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது

உயிரிழந்தவரது சடலம் இதுவரை உறுதிப்படுத்தப்படாதுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
 

Leave a Reply