• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற சுமார் 15 கோடி ரூபா பெறுமதியான கோதுமை பறிமுதல்

இலங்கை

கனேவல்பொல பகுதியில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற சுமார் 15 கோடி ரூபா பெறுமதியான கோதுமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது

இதன்படி 25 மற்றும் 50 கிலோகிராம் நிறையுடைய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

கெக்கிராவ சுகாதார வைத்தியஅதிகாரி அலுவலகத்திறகு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த தொகை கோதுமை மா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

இதேவேளை பறிமுதல் செய்யப்பட்ட கோதுமை மாவில் நச்சுப்பொருட்கள் உள்ளடக்கப்பட்டு காலாவதியடையும் திகதிகள் என்பன மாற்றியமைக்கப்பட்டு புதிதாக பொதிசெய்து விற்பனைக்கு தயார் செய்யப்பட்டிருந்ததாக கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமான கஞங்சியசாலையில் இருந்து குறித்த கோதுமை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
 

Leave a Reply