• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீன்பிடி வலையில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு

இலங்கை

வாழைச்சேனை, புனானி ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் தான் பயன்படுத்திய மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சுகயீனம் காரணமாக வீட்டில் வேலையில்லாமல் இருந்ததாகவும், புனானி ஏரியில் மீன்பிடிப்பதற்காக மீன்பிடி வலையை எடுத்து சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் எனவும்  விசாரணைகளில்  இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் நீதவான் பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வாழைச்சேனை பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply