பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறையை மாற்றியமைக்கத் தீர்மானம்
இலங்கை
எதிர்காலத்தில் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான புதிய தலைமுறையை உருவாக்குவதற்கு சிறந்த கல்விக் கொள்கையுடன் கூடிய சத்தான உணவுகளை வழங்குவதும் மிகவும் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஆரோக்கியமான சுறுசுறுப்பான தலைமுறை என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டின் பாடசாலைக்கான சத்துணவு திட்டம் இன்று ஜனாதிபதியினால் நாரஹேன்பிட்டி சுஜாதா மகளிர் கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” பாடசாலைக்கான காலை உணவுத் திட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளோம். அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளில் ஒன்றை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை நான் பார்க்கிறேன்.