• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த முக்கிய அறிவிப்பு

இலங்கை

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இந்த வாரம் பெயரிடப்படுவார்” என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, தம்மிக்க பெரேரா ஆகிய நால்வரில் ஒருவரே அந்த வேட்பாளராக இருப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான கோப் குழுவில் இருந்து விலகுவதால் அக்குழுவின் தலைமைப் பதவியை தான் துறக்கப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி அல்லது ஆளும் கட்சி கோரிக்கை விடுத்தால் மட்டும் தான் பதவி விலகத் தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply