• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வான்வழியில் நுழைந்த ஏவுகணை - ரஷியாவிடம் விளக்கம் கேட்கும் போலந்து

உக்ரைன் மீது ரஷியா வலுக்கட்டாயமாக தாக்கல் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதல் போராக மாறியது. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை தாண்டியும் நடைபெற்று வருகிறது. தற்போது உக்ரைன் எதிர்தாக்குதல் யுக்தியை பயன்படுத்தி வருகிறது. இதனால் ரஷியாவுக்கு அதிகப்படியாக சேதம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் தாக்குதலுக்கு ரஷியா பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த நான்கு நாட்களில் மூன்று மிகப்பெரிய ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் உக்ரைன தலைநகர் கீவ் நகரையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கும் மிக அருகில் உள்ளது போலந்து. உக்ரைனை குறிவைத்து ரஷியா ஏவும் ஏவுகணைகள் சில நேரத்தில் போலந்து வான்வழிக்கு செல்வது உண்டு. அப்படி கடந்த சில நாட்களில் ஏவிய ஏவுகணைகள் ஒன்று போலந்து நாட்டின் வான்வழியில் நுழைந்ததாக போலந்து குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், உடனடியாக இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என போலந்து வலியுறுத்தியுள்ளது. மேலும், எஃப்16 போர் விமானத்தை செயல்படுத்த நேட்டோ உறுப்பினர் நாட்டை தூண்டுகிறது எனவும் எச்சரித்துள்ளது.
 

Leave a Reply