• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையில் மெக்டோனால்ஸ் நிறுவனம் திடீரென பூட்டு , நீதிமன்றம் விடுத்த உத்தரவு

இலங்கை

மெக்டோனால்ஸ் (Mcdonald’s) சர்வதேச நிறுவனத்தின் இலங்கை கிளைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இலங்கையிலுள்ள மெக்டோனால்ஸ் கிளைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக GOOGLE MAPல் குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அத்துடன், மெக்டோனால்ஸ் கிளையொன்றின் பெயர் பலகையை அப்புறப்படுத்தும் படமொன்று சமூக வலைத்தளங்ளில் பகிரப்பட்டு வருகின்றது.

மேலும், மெக்டோனால்ஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான இணையத்தளம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களும் செயலிழந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

மெக்டோனால்ஸ் நிறுவனத்தின் தொலைபேசி இலக்கங்களும் செயற்படவில்லை.

அத்துடன், மெக்டோனால்ஸ் நிறுவனத்தை தொடர்புக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

மெக்டோனால்ஸ் நிறுவனத்தினால், இலங்கை முகவரான அபான்ஸ் நிறுவனத்திற்கு எதிராக கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றின் அடிப்படையில், நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிய வருகிறது.

இலங்கையில் மெக்டோனால்ஸின் தரம் குறைவே இதற்கான காரணம் என சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
 

Leave a Reply