• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆட்சிக்கு வர விரும்புபவர்கள் நாட்டு மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டும் - ஐ.தே.க

இலங்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியினரும் நாட்டிற்கு பாரிய சேதத்தை ஏற்படுத்திய இரண்டு யுகங்களாக காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியினரும் நாட்டை வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற வரலாறு உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்நாட்டு யுத்தத்தின் போது நாட்டிற்கு ஏற்படுத்திய சேதத்திற்கு இணையாகவே மக்கள் விடுதலை முன்னணி இந்த நாட்டின் பொருளாதாரத்தை 12 வருடங்கள் பின்னோக்கி கொண்டு சென்றவர்கள்.

மக்கள் விடுதலை முன்னணியினரால் சுமார் 49 ட்ரில்லியன் பொருளாதார இழப்பு நாட்டிற்கு ஏற்பட்டது.

அதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளநாட்டு யுத்தத்தின் போது இந்த நாட்டின் பொருளாதாரத்தை 30 வருடங்கள் பின்னடைய செய்தவர்கள்.

எனவே நாட்டில் ஆட்சி பீடத்திற்கு ஆசைப்படுபவர்கள் முதலில் நாட்டு மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
மக்கள் இழந்ததை மீளப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதன்பின்னரே ஆட்சியை கோர வேண்டும்.

இதனைவிடுத்து வெறுமனே ஆட்சியைக் கோருவதனால் மக்கள் ஆணை கிடைக்கப்போவதில்லை.

ஆட்சியைக் கோரி இந்த நாட்டை வெனிசுலா கியூபா வடகொரியா போன்ற நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையை இந்த நாட்டில் ஏற்படுத்த எண்ணுகின்றனர்” என ஆசு மாரசிங்க மேலும் குறிப்பிட்டார்.
 

Leave a Reply