• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகும் நடிகை பூர்ணிமா ரவி

சினிமா

தமிழ் சினிமாவில் பயணத்தை தொடங்கி இருக்கும் பூர்ணிமா ரவி தனக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான 'செவப்பி' படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, சிறந்த நடிப்பால் கவனம் ஈர்த்தார்.

ஆரம்ப காலத்தில் விரும்பிய கதாபாத்திரங்களைக் கண்டுபிடிப்பதில் சவால்களை எதிர்கொண்டதாக பூர்ணிமா ரவி தெரிவித்துள்ளார். தற்போது, தன்னை முதன்மைப்படுத்தி பட வாய்ப்புகள் வருவதாக தெரவித்து இருக்கிறார்.

பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்த பூர்ணிமா ரவி, தனுஷை குறிப்பிட்டார். மேலும் ஒரு கதாபாத்திரத்திற்காக தனுஷ் எந்த எல்லைக்கும் செல்வது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். இதே போன்ற நடிப்பு திறன் த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கும் இருக்கிறது என்று தெரிவித்தார்.
 

Leave a Reply