• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முச்சக்கரவண்டி சாரதியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி பணம் கொள்ளை

இலங்கை

கரந்தெனிய, திவியகஹவெல, பனலிய பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர், குறித்த முச்சக்கரவண்டி சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கி, பணத்தைக்  கொள்ளை அடித்து சென்றுள்ள சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

நேற்று பிற்பகல் எல்பிட்டிய நகரில் உள்ள தேவாலயத்திற்கு அருகில், முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் வாடகை வண்டி சாரதியுடன் திவியகஹவெல பிரதேசத்திற்கு செல்வதற்காக குறித்த இருவரும் முச்சக்கர வண்டியில் ஏறியுள்ளனர்.

பிற்பகல் 2 மணி அளவில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் திவியகஹவெல, பனலிய பிரதேசத்தில் சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கி, அருகில் உள்ள காணிக்கு அழைத்துச் சென்று அவரிடம் இருந்து பணம் மற்றும் தொலைபேசியை அபகரித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாரதியின் சட்டையையும் கிழித்த சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பியோடிய பின்னர், குறித்த சாரதி வீதிக்கு வந்து அங்கு பயணித்த ஒருவரிடம் சம்பவத்தை கூறியுள்ளனர். இது தொடர்பில் கரந்தெனிய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த சாரதி எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த நபர் எல்பிட்டிய, கம்பட்டியவத்தை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் எனவும், சம்பவம் தொடர்பாக கரந்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply