• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரணில் ராஜபக்சவின் ஆட்சியை விரட்டியடிக்க பெண்கள் அணிதிரள வேண்டும்

இலங்கை

ரணில் ராஜபக்சவின்  ஆட்சியை விரட்டிக்க பெண்கள் அணிதிரளவேண்டுமென  தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

113 ஆவது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு  கொழும்பிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் கட்சி பிராதன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து  அவர் மேலும் தெரிவிக்கையில் ” வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மக்களின் விவசாயக் காணிகள் அபகரிக்கப்பட்டு நில ஆக்கிரமிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் ரணில் ராஜபக்ஸ அரசாங்கம் ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகளிலேயே இறங்கியிருக்கிறது.

இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் அதாவது 70 இலட்சம் பேர் அடுத்தவேளை உணவை பெற்றுக்கொள்வதற்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கான பிரதான காரணம் 2022 ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியாகும். இந்தப் பொருளாரதார நெருக்கடியின் காரணத்தால் கடந்த இரு வருடங்களில் 15 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் வேலையில்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மக்களுக்கு தொழில்வாய்ப்புகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. இம்மக்களின் விவசாயக் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. நில ஆக்கிரமிப்பு தொடர்கிறது. விவசாயக் காணிகள் விடுவிக்கப்படவில்லை. அதைப்போல, இளைஞர்கள் போதைப்பொருள் பாவனையில் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கில் காணிப்பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் கணவனை இழந்த பெண்கள், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு கிட்டவில்லை. இவற்றுக்கு எவ்வித பதிலையும் வழங்காது அரசாங்கம் கள்ள மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறது.

எனவே இந்த நாட்டை அழிக்கின்ற ரணில் ராஜபக்ஸ ஆட்சியாளர்களை விரட்டியடிப்பதற்கு எதிராக பெண்கள் அணிதிரள வேண்டும்” இவ்வாறு சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply