• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அசிட் வீச்சு தாக்குதல்

இலங்கை

இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன்று (புதன்கிழமை) அசிட் வீச்சு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இதில் மூவர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வாகன விபத்து தொடர்பான வழக்கு ஒன்றிற்காக வந்து கொண்டிருந்த நபரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அப்போது வீதியில் பயணித்த இரண்டு சிறுவர்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கடந்த ஆண்டு சிங்கள புத்தாண்டு தினத்தன்று இரத்தினபுரி கோவிலுல் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் அசிட் வீச்சுக்கு இலக்கானவர் பிரதான சந்தேகநபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் தந்தையை அசிட் வீச்சை மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் இரத்தினபுரி பொலிஸார் கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply