• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சவால்களுடன் நாட்டைப் பொறுப்பேற்ற ஜனாதிபதி வெற்றி கண்டுள்ளார் - அமைச்சர் ஹரின்

இலங்கை

சவால்களுக்கு மத்தியில் நாட்டைப் பொறுப்பேற்ற ஜனாதிபதி இன்று அதில் வெற்றி கண்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றகையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார. இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சவால்களுக்கு மத்தியில் நாட்டை பொறுப்பேற்ற ஜனாதிபதி நாட்டை சரியான பாதைக்கு இட்டுச்சென்றுள்ளார் என்றே கூற வேண்டும்.

டொலர் விலை இன்று 307 ரூபாவாக காணப்படுகின்றது. ஏனென்றால் ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது.
சுற்றுலாத்துறைக்கான மின்கட்டணம் நூற்றுக்கு 12 சதவீதமாக குறைவடையவுள்ளது.

பாரிய சவால்களுக்கு மத்தியில் நாட்டை பொறுப்பெற்ற ஜனாதிபதி இன்று அதில் வெற்றிகண்டுள்ளார்.

நாடு நெருக்கடியில் சிக்கியிருந்த போது பலர் நாட்டை பொறுப்பெற்க தயங்கியதையும் மறந்துவிட முடியாது” என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply