• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எதிர்க் கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்கும் பாலித்த ரங்கே பண்டார

இலங்கை

ஜனாதிபதித் தேர்தலுக்காக அமைக்க இருக்கும் பரந்துபட்ட கூட்டணியில் சஜித் பிரேமதாசவினையும்  இணைந்துகொள்ள முடியுமென ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”  ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலரும் தம்முடன் இணைந்துகொள்ள உள்ளனர்.  காப்போக்கில் சஜித் பிரேமதாசவும் இணைந்துகொள்ள இடமிருக்கின்றது.

அத்துடன், ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து எதிர்வரும் 10ஆம் திகதி குருணாகலையில் நடத்த இருக்கின்ற மாநாட்டில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பலர் தம்முடன் கைகோர்க்க உள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டணி அமைக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதுடன், 80க்கும் மேற்பட்ட அமைப்புகள் தம்முடன் கலந்துரையாடி உள்ளனர். அவர்கள் அனைவரும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க இணக்கம் தெரிவித்துள்ளனர்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply