• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொகவந்தலாவை கொட்டியாகல தோட்டப் பகுதியில் காட்டுத்தீ பரவல்

இலங்கை

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல தோட்டப் பகுதியில் காட்டுத்தீ பரவல் காரணமாக சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது.

மலையகத்தில் நிலவிவரும் வறட்சி காரணமாக குறித்த வனப்பகுதியில் நேற்று இவ்வாறு தீ பரவியுள்ளது.

எனினும் இந்த சம்பவமானது திட்டமிடப்பட்ட செயலாகும் என குறித்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெறும் பட்சத்தில் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிபுண தெஹிகம தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply