• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று மேலும் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி மனித உடலால் உணரப்படும் வெப்பமானது வடமேற்கு, மேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களில் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல், கடுமையான வெளிப்புறச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அதிக சூரிய ஒளியின் காரணமாக தலைவலி, வாந்தி, உடல்வலி, தூக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும் என்று குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா கூறியுள்ளார்.
 

Leave a Reply