• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புத்தூர் – வளர்மதி பகுதியில் வீடு ஒன்று தீக்கிரை

இலங்கை

யாழ்.புத்தூர் மேற்கு பகுதியில் வீடொன்று தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனால், வீட்டில் இருந்த பொருட்களும் முற்றாக அழிவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி யாழ்ப்பாணம், புத்தூர் மேற்கு, வளர்மதி பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த வீட்டில் யாரும் இல்லாத நிலையிலேயே இந்த தீ விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தினால், வீட்டில் இருந்த உடமைகள் அனைத்தும் முற்றாக அழிவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தின் வீடே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாகவும் அன்றாடம் கூலி வேலை செய்து சேமித்து காணி வாங்குவதற்காக வைத்திருந்த 800,000 ரூபாய் பணமும் தீயில் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மின்சார ஒழுக்கு காரணமாக இந்த அனர்த்தம் இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply