• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெப்பமான காலநிலை அடுத்த மாத நடுப்பகுதி வரை நீடிக்கும்-வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கை

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை உள்ளிட்ட நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை அடுத்த மாத நடுப்பகுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந் நிலைமையினால் சில பகுதிகளில் உள்ள நீரோடைகள் மற்றும் கிணறுகளின் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்து மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குருநாகலில் நேற்றுஅதிகூடிய வெப்பநிலையாக 35.5 பாகை செல்சியஸ் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply