• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நைஜீரியாவில் பிரார்த்தனை கூட்டத்தில் 15 பேர் சுட்டுக்கொலை

நைஜீரிய நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள பர்கினோ பாசோ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது.

இதில் ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர். அப்போது திடீரென துப்பாக்கி ஏந்திய ஒரு கும்பல் தேவாலயத்திற்குள் நுழைந்தது. அவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர்.

இந்த கோர தாக்குதலில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 

Leave a Reply