• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இராமேஸ்வரம் மீனவர்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டம்

இலங்கை

இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க வருகைத் தந்துஇ சட்டவிரோதமாக கடல் எல்லையைக் கடந்து மீன் பிடித்த குற்றச்சாட்டுக்காகஇ இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ஐந்து இராமேஸ்வர மீனவர்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஐந்து மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும்இ 2018 ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 151 விசைப் படகுகளை விடுவிக்க கோரியும் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply