• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரேமதாஸவினர் ராஜபக்ஷவினரின் வாயிற் காப்பாளர்கள் அல்ல-சஜித் பிரேமதாஸ

இலங்கை

பிரேமதாஸவினர் ராஜபக்ஷவினரின் வாயிற் காப்பாளர்கள் அல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்

கடவத்தை மஹர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் அரண் நிகழ்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அதன்படி அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் நாட்டில் ஏறக்குறைய 40 சதவீதமான மக்கள் வறுமையில் வாடுகின்றதுடன் நாட்டில் ஏழ்மையடைந்தோரின் எண்ணிக்கை 40 இலட்சமாக உயர்வடைந்துள்ளது.

நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த வறுமைக்கு உரிய தீர்வை வழங்காவிட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் நாட்டில் வறுமையை இல்லாதொழிக்கும் புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

இதன் கீழ், நுகர்வு, முதலீடு, சேமிப்பு மற்றும் உற்பத்திக்கு ஊக்கமளித்து வறுமையை ஒழிப்பதற்கான தேசிய திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 

Leave a Reply