• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஜயகாந்துக்கு பதிலா வேறு நடிகரை வச்சி எடுத்த டைரக்டர்!. கேப்டன் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?..

சினிமா

தமிழ் சினிமா பிரபலத்தை யாருமே தப்பாக சொல்லாமல் ஒருவரின் பெருமையை மட்டுமே சொல்ல முடியும் என்றால் அது இப்போதைய சூழலில் மறைந்த விஜயகாந்த் மட்டும் தான். அவர் அத்தனை செய்து இருக்கிறார். அப்படி இயக்குனர் ஒருவர் தனக்கும் விஜயகாந்துக்குமான உறவு குறித்து பேசி இருக்கிறார்.

இயக்குனர் ராம நாராயணன் இயக்கத்தில் உருவாகி வந்தது தான் கரிமேடு கருவாயன் திரைப்படம். இப்படத்தில் விஜயகாந்த், நம்பியார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஒரு தியேட்டரில் படம் ஷூட் செய்ய வேண்டும். அப்போது விஜயகாந்த் மீது இருந்த ஆசையால் கூட்டம் கூடிவிட்டது.

இதில் படப்பிடிப்பை நடத்தவே முடியாது. ஆனால் தயாரிப்பாளர் சங்கிலி முருகனோ படத்தினை எடுக்க கூற ராமநாராயணன் முடியாது என்றாராம். ஒரு கட்டத்தில் எனக்கு வேறு படம் இருக்கு. இந்த படத்தினை இயக்குனர் கோலப்பனை வைத்து முடிக்க சொல்லி அவர் கிளம்பிவிட்டார்.

அப்போது அருணாச்சல ஸ்டுடியோவில் ஷூட்டிங் நடத்தப்பட இருந்தது. ஒரு காட்சியில் விஜயகாந்த் வெயில் நேரத்தில் எண்ட்ரி எடுக்கும் ஒரு காட்சி வேண்டும். ஆனால் விஜயகாந்த் வரவில்லை. கொஞ்சமும் யோசிக்காத கோலப்பன் டூப்பை போட்டு அந்த காட்சியை முடித்துவிட்டார். 

ஆனால் சில விஷமிகள் இந்த விஷயத்தை கூற அவர்களிடமே ஏன் டூப் போட்டார் என விஜயகாந்த் கேட்க டே லைட்டில் எடுக்கணும். நீங்க வர லேட் ஆச்சு என்றனராம். உடனே கோலப்பனை கூப்பிட்டு விஜயகாந்த் சிரித்தாராம். எனக்கே டூப்பா சூப்பர். ஒரு காட்சிக்கு நான் கால்ஷூட் கொடுக்கணும். ஆனால் எனக்காக வெயிட் செய்யாமல் தயாரிப்பாளரை நஷ்டப்படுத்தாமல் செய்ததுக்கு நீங்க நல்ல டைரக்டர் எனப் பாராட்டியதாக இயக்குனர் கோலப்பன் கூறினார்.

மேலும், தமிழ் சினிமாவில் அப்போதைய காலத்தில் பஞ்ச பாண்டவர்களாக விஜயகாந்த், வாகை சந்திரசேகர், தியாகு, ராதா ரவி ஆகியோர் இருந்தனர். அதில் தர்மர் என்றால் விஜயகாந்த் தான். எங்குமே தன்னை நடிகராக அவர் சீன் போட்டதே இல்லை. தெருவில் வேஷ்டியை கட்டிக்கொண்டு இறங்கி நின்ற சம்பவமும் நடந்ததாக தெரிவித்து இருக்கிறார்.
 

Leave a Reply