• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் போலி சட்டத்தரணிகள் குறித்து எச்சரிக்கை

கனடா

கனடாவில் போலி சடடத்தரணிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொன்றியலில் இவ்வாறான போலி குடிவரவு சட்டத்தரணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நகரிற்குள் புதிதாக பிரவேசிப்போருக்கு உதவுவதாக கூறி அவர்களிடம் மோசடி செய்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவில் குடியேறும் எண்ணத்தில் வருகை தரும் குடியேறிகளை இலக்கு வைத்து சட்டவிரோத சட்டத்தரணி கும்பல்கள் இயங்குவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மொன்றியல் சட்டத்தரணிகள் சங்கம் இந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களுக்கு குறிப்பாக குடியேறிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இந்த போலி சட்டத்தரணிகள் குடியேறிகளை சந்தித்து சில ஆவணங்களை செய்ய வேண்டியிருப்பதாக கூறி பணம் பெற்றுக்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வழமையாக சட்டத்தரணிகள் அறவீடு செய்யும் தொகையை விடவும் கூடுதல் தொகையை இவர்கள் குடியேறிகளிடம் அறவீடு செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மோசடிகளில் ஈடுபடும் அதிகளவானவர்கள் சட்டத்தரணியாக கியூபெக்கில் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டவர்கள் அல்லது சொந்த நாட்டில் சட்டத்தரணிகளாக செயற்பட்ட குடியேறிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இவர்களுக்கு கனடாவில் முறைப்படி சட்டத்தரணியாக பிரதிநிதித்துவம் செய்யும் தகுதி கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நபர்கள் தொடர்பில் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

Leave a Reply