• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மக்கள் விடுதலை முன்னனியின் கொள்கையில் மாற்றம்

இலங்கை

மக்கள் விடுதலை முன்னனி இந்தியாவிற்கு விஜயம் செய்யாமல் இருந்திருந்தால், இலங்கையில் UPI செலுத்தும் முறைக்கு எதிராக  கருத்துகள் எழுந்திருக்கும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மொனராகலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெல்லவாய பொது விளையாட்டரங்கில் நேற்றும், இன்றும்  நடைபெறவுள்ள ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை கொள்கைகள் நிரந்தரமானவை அல்ல என்பதற்கு மக்கள் விடுதலை முன்னனி ஓர் உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 

Leave a Reply