• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குடும்ப தகராறு காரணமாக : மனைவியின் கால்களை வெட்டிய கணவன்

இலங்கை

குடும்ப தகராறு காரணமாக புஸ்ஸ மெதேவல பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவியின் இரு கால்களையும் இன்று (17) துண்டித்துள்ளார்.

34 வயதான மனைவி ஆசிரியை என்றும் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த தகராறில் கணவர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் மொபைல் போன்களை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.

குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 

Leave a Reply