• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றை வாங்கிய இந்தியர்... 

இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான பங்கஜ் ஓஸ்வால் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் இணைந்து சமீபத்தில் உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றை வாங்கியுள்ளனர்.

தங்களின் மகள்களான வசுந்திரா மற்றும் ரிதி ஆகியோரின் பெயர்களை குறிப்பிடும் வகையில் குறித்த மாளிகைக்கு Vari என பெயர் சூட்டியுள்ளனர். இந்த மாளிகையானது முன்னர் கிரேக்க கோடீஸ்வரியான Christina Onassis என்பவருக்கு சொந்தமாக இருந்துள்ளது.

இந்திய பண மதிப்பில் சுமார் 1649 கோடி செலவிட்டு, அந்த மாளிகையை பங்கஜ் ஓஸ்வால் சொந்தமாக்கியுள்ளார். உலகின் முதல் 10 விலையுயர்ந்த வீடுகளில் ஒன்று இதுவென்றே நம்பப்படுகிறது.

சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்தில் Gingins கிராமத்தில் 40,000 சதுர மீற்றரில் இந்த மாளிகை அமைந்துள்ளது. பிரமாண்டமான இந்த மாளிகையின் உட்புறத்தை ஜெஃப்ரி வில்க்ஸ் வடிவமைத்துள்ளார்.

இந்தியாவின் முதன்மை தொழிலதிபர்களில் ஒருவரான அபய் குமார் ஓஸ்வால் என்பவரின் மகன் தான் இந்த பங்கஜ் ஓஸ்வால். ஓஸ்வால் குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு என்பது ரூ 247,000 கோடி என்றே கூறப்படுகிறது.

பர்ரப் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிறுவனராக பங்கஜ் ஓஸ்வால் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply