• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காதலர் தினத்தில் இலங்கை நடிகை காதலனுக்கு கொடுத்த க்ஷாக்

இலங்கை

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை ஜாக்குலின் அவரது காதலன் என கூறப்படும் சுகேஷ் சந்திரசேகர் மீது பரபரப்பு புகார் ஒன்றினை அளித்துள்ளார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் , கடந்த 2009இல் இந்தியாவில் மாடலிங் செய்து , திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

இதற்கிடையே, மாபெரும் மோசடி மன்னனான சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் காதலில் விழுந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், அந்த காதலனால் தற்போது பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளார்.

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு, டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.200 கோடி மோசடி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர். சுகேஷால் அரங்கேறிய மோசடி சம்பவங்களுக்கு நடிகை ஜாக்குலினுக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அது தொடர்பாக அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ. மற்றும் டெல்லி போலீசார் விசாரணையை தொடங்கிய போது, தனக்கும் சுகேஷுக்கும் எந்த தொடர்பும் இல்லை என நடிகை மறுத்துள்ளார்.

அதன்பின்னர் , இருவரும் நெருக்கமான எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியானது. அது வரை உண்மையை மறைத்த நடிகை, நாங்கள் இருவருமே காதலர்கள்தான் என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

இந்நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ், அங்கிருந்தபடியே பிரபல தொழிலதிபர் மனைவியிடம் அவரது கணவருக்கு ஜாமீன் வாங்கி தருவதாக ஏமாற்றி ரூ200 கோடி வரை மோசடி செய்தது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

பரிசுகளை நடிகை ஜாக்குலினுக்கு சுகேக்ஷ் வழங்கியதை கண்டுபிடித்த புலனாய்வாளர்கள், நடிகையிடம் சுகேஷ் கொடுத்த பரிசுகளை பறிமுதல் செய்தனர்.

அதோடு , நடிகையின் பாஸ்போர்ட்டையும் முடக்கி அவர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என தடை விதித்தனர். இதையடுத்து தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று ஜாக்குலின் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

  வழக்கில் சுகேஷ் தன்னை சிக்கவைத்து விட்டதாகவும், சுகேஷ் செய்த குற்றத்தில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று நடிகை விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில்  தனக்கும் சுகேஷுக்கும் சட்டவிரோதமாக எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும் சிறையில் இருந்து கொண்டே தேவையில்லாமல் தனக்கு மிரட்டல் விடுத்து வருவதாகவும் புகார் அளித்துள்ளாராம் நடிகை ஜாக்குலின்.

இந் நிலையில், காதலர் தினத்துக்குச் சரியான பரிசை நடிகை ஜாக்குலின் தனது காதலனுக்கு கொடுத்துள்ளார் என, பாலிவுட் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply