• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீண்டும் விசாரணைக்கு வரும் கெஹலிய ரம்புக்வெல்லவின் வழக்கு

இலங்கை

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்படி இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரபுக்வெல்ல நீதிமன்றில் ஆஜராகாததுடன், வழக்குடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

மேலும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply