• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எக்கசக்க கடன்… தப்பித்து சென்னை வந்த சரத்குமார்… எப்படி ஹீரோவானார் தெரியுமா?

சினிமா

வயசானாலும் உங்க ஸ்டைல் அப்படியே இருக்கு என்ற டயலாக்குக்கு சொந்தக்காரர் நடிகர் சரத்குமார் தான். ஆனால் அவர் நடிகராக ப்ளான் செய்யாமல் தான் எண்ட்ரி கொடுத்தார். அதுவும் பெங்களூரில் இருந்து சென்னை வந்ததுக்கே ஒரு பெரிய கடன் பிரச்னை தான் காரணம் என்று தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

அவர் பேட்டியில் இருந்து, ஆல் இந்தியா ரேடியோவில் நியூஸ் வாசித்த வாசிப்பது ராமநாதன் என்னுடைய அப்பா தான். நான் டெல்லியில் தான் பிறந்து அங்கையே முதற்கட்ட பள்ளியை தொடங்கினேன். எனக்கு இந்தி, இங்கிலிஷ், கன்னடா, மலையாளம், ரஷ்யன் ஆகிய மொழிகள் தெரியும். அதுக்கு என் அப்பா தான் காரணம். அவர் நிறைய மொழிகளை கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தினார்.

நான் ஐஏஎஸ் அகாடமியில் படித்து கொண்டு இருந்தேன். அப்போ அரசியலில் இருந்த என்னுடைய மாமா தான் இது வேண்டாம். எதுவும் பிசினஸ் செய் என்றார். அதையடுத்தே நான் சின்னதாக ரிப்போட்டர் வேலைக்கு வந்தேன். அதுவும் பெரிய ரீச் இருக்காது. ட்ரன்க் கால் கொடுத்து அந்த தகவலை சொன்னதுக்கே 30 நிமிடம் வரை ஆகும். பேப்பர் போடும் வேலையை கூட செய்து இருக்கேன்.

அந்த சமயங்களில், கிரிமினல் ரிப்போட் கொடுக்கும் வேலைகளை செய்தேன். 6 வருடம் வேலை செய்து வந்தேன். அதை தொடர்ந்து என்னை வளர்த்துக்கவே டெலிவிஷன் ஸ்டோர் வைத்தேன். டெலிவிஷன் பிசினஸ் செய்யும் போது பெரிய அளவில் 150 டிவிகளை வாங்கி குவித்தேன். அதில் நமக்கு கொஞ்சம் டிஸ்கவுண்ட் தருவார்கள். அதை நம்பி வாங்கினேன்.

ஆனால், அந்த நேரத்தில் தான் கலர் டிவி 3000த்துக்கு கிடைக்கும் என்ற அறிவிப்பு வந்தது. நான் வைத்து இருந்த டிவிகள் எல்லாம் 7000 ரூபாய் மதிப்புடையது. யார் அதை வாங்குவார்கள்? மிகப்பெரிய நஷ்டம் ஆனது. அதனால் தான் அங்கிருந்து சென்னை வந்தேன். இங்கு வந்த பின்னரே டிராவல் பிசினஸ் செய்தேன் என்றார்.

கண்ணதாசன் என்பவர் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். பின்னர் இதை தொடர்ந்து கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தெலுங்கில் நடிகராக அறிமுகமானார். அதற்கடுத்த வருடமே சின்ன பூவே மெல்ல பேசு என்ற தமிழ் படத்தில் முக்கிய வேடத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply