• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீகொட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் - சிறுமி படுகாயம்

இலங்கை

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்றிரவு துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ள நிலையில் சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடையொன்றில் திருட முற்பட்ட குழுவொன்றே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது.

மீகொட பொருளாதார மத்திய நிலையத்திற்குள் அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்த இருவர் கடையொன்றை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அப்போது கடையில் காசாளராக இருந்த சிறுமியின் வயிற்றில் மூன்று தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்த நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், சர்தேக சபர்கள் பணத்தை கொள்ளையிடுவது பதிவாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு முன்பாக பொலிஸ் நிலையம் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி சூடு நடத்திய இரண்டு சந்தேக நபர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

திருடப்பட்ட தொகை இதுவரை வெளிவராத நிலையில், காயமடைந்த சிறுமி தற்போது ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply