• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை ஆரம்பம்

இலங்கை

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் பிரகடன உரையுடன் இன்று ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதம் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் 26 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்
அரசியலமைப்பின் உறுப்புரையின் பிரகாரம் கூட்டத்தொடரை ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில் இன்று ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதியின் தலைமையில் வைபவரீதியாக காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
 

Leave a Reply