• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுங்க வரி செலுத்தாத 4 கோடி பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுடன் இருவர் கைது

இலங்கை

சுங்க வரி செலுத்தாமல் கடத்திச் செல்லப்பட்ட நான்கு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு பெரியமுல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த சிகரெட் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

பிரத்தியேக வெளிநாட்டு வர்த்தக நாமத்தின் சுமார் 400,000 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாத்தாண்டிய மற்றும் கொச்சிக்கடை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அதேவேளை, சிகரெட் தொகைகளை ஏற்றிச் சென்ற லொறியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a Reply