• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரு குடும்பத்திற்கு 20 கிலோ அரிசி வழங்கப்படும் - ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கை

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணமாக பண்டிகைக் காலத்தில் ஒரு குடும்பத்திற்கு இருபது கிலோ அரிசி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வருட நிவாரணத்தின் மூலம் 24 இலட்சம் பேருக்கு நன்மைகளை வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் இதன் மூலம் நாட்டின் மிகக் குறைந்த மட்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதுவரையான காலப்பகுதியில் வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகை மானியம் வழங்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
 

Leave a Reply