சம்பள சர்ச்சைக்கு ராஷ்மிகா கொடுத்த விளக்கம்
சினிமா
நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் ரிலீஸ் ஆன அனிமல் படம் மூலமாக பாலிவுட்டிலும் பாப்புலர் ஆகி இருக்கிறார். அந்த படத்திற்காக அவருக்கு 4 கோடி ருபாய் சம்பளமாக தரப்பட்டதாக முன்பே தகவல் வெளியானது.
இந்நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் ராஷ்மிகாவை அணுகினால் அவர்களிடமும் 4 கோடி ருபாய் சம்பளம் கேட்கிறார் என தகவல் பரவியது.
"நான் சம்பளத்தை உயர்த்தியதாக யார் சொன்னது. இப்படி செய்தி வருவதை பார்த்த பிறகு தான் அப்படி செய்யலாம் என தோன்றுகிறது."
"தயாரிப்பாளர்கள் கேட்டால், மீடியாவில் அப்படி சொல்கிறார்கள் அதனால் தான்.. என சொல்ல போகிறேன்" என ராஷ்மிகா கூறி இருக்கிறார்.