• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இங்கே பொன் வீணை

சினிமா

1987ல் வெளியான கண்ணுக்கொரு வண்ணக்கிளி படத்தில் வரும் “இங்கே பொன் வீணை” என்ற பாடலே லதா மங்கேஸ்கர் இசைஞானியின் இசையில் பாடிய முதல் பாடல். இசைஞானி தனது முதல் படத்தில் இவரை பாட வைக்க நினைத்து அது முடியாமல் போனதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தது அனைவரும் அறிந்ததே.. தொடர்ந்து ஆராரோ ஆராரோ (ஆனந்த்), வளையோசை, இங்கேயும் (சத்யா), எங்கிருந்தோ அழைக்கும் (என் ஜீவன் பாடுது) என ஹிட் பாடல்களை பாடினார்... இதில் சத்யாவில் வரும் “எங்கேயும்” பாடல் படத்தில் இல்லை என்பது குறிப்பிடதக்கது. 
காதலில் உருகும் பாடல் ஒன்று…
கேட்கிறதா உன் காதினிலே...
காதலின் உயிரை தேடி வந்து… 
கலந்திட வா என் ஜீவனிலே…

இசைஞானியின் வரிகளில் "எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்" பாடல் ரெக்கார்டிங் தியேட்டரில் லதா மங்கேஸ்கர் அம்மா பாடி பதிவான கேஸட்டை இசைஞானி வீட்டுக்கு வந்ததும் முதலில் ஜீவா அம்மாவுக்கு தான் போட்டு காட்டினாராம்.. இந்த பாடலை கேட்க ஆரம்பித்த ஷனம் ஜீவா அம்மாவின் கண்களில் கண்ணீர் அருவியாக பெருக்கெடுத்ததாம்... அவ்வளவு ஜீவன் உள்ள பாடல் அந்த ஜீவனையே கரைத்து விட்டது என்பதே சாலச்சிறந்த உண்மை.
லதா மங்கேஸ்கர் அவர்களுக்கு நினைவு (6/2/2022) புகழ் அஞ்சலி... 

Kannan Natarajan
 

Leave a Reply