• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நண்டு திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு ஷாட்தான் இது!

சினிமா

இந்த Expression வருவதற்கு நடிகை வனிதாவிடம் இயக்குனர் மகேந்திரன் அவர்கள் பெருசா விளக்கியிருக்க வாய்ப்பில்லை.காரணம்,சாதாரண ஒரு காட்சியது.

குடித்தனக்காரர்கள் அனைவரும் ஒன்றாக கூடத்தில் குழுமியிருக்கிறார்கள்.நாயகனை வற்புறுத்தி பாடச் சொல்கிறார்கள்.அவன், அவனுடைய தாய் மொழியான இந்தியில் பாட ஆரம்பிக்கிறான்.அப்பொழுது வரும் ஷாட்தான் இது.

'நீ விரும்பும் அவனை ஏக்கத்தோடு பார்க்க வேண்டும் ',என்று மட்டுமே சொல்லியிருப்பார்.அதற்குத்தான் இப்படியொரு பார்வையால்,அழகான நாயகனோடு நம்மையும் சேர்த்து விழுங்கும் படி பார்த்திருக்கிறாள்(ர்).

நடிகை வனிதா 1980's-ல் நிறைய படங்களில் நடித்தவர்.எச்சில் இரவுகள் படத்தில் நன்றாக நடித்திருப்பார்.குட்டை வனிதா என்றே அழைப்பார்கள்.

இன்றைக்கு,ஒரு சில நடிகர்களின் நடிப்பை பல படங்களில் பார்த்தாலும் வெறுப்புதான் மண்டுதே வருதே தவிர,அந்த நடிகர்களின் மீது மதிப்பே வரமாட்டேங்குது.

வனிதாவின் இந்த ஷாட்டைப் பார்க்கும் போது இயக்குனர் பாலா சார் சொன்னது ஞாபகத்துக்கு வருது,"சிறந்த நடிகர்கள் Single shot-.லேயே தங்களின் நடிப்பின் வீரியத்தை காட்டி விடுவார்கள்".

கடந்த வருடம் இந்தப் பதிவை முக்தா பிலிம்ஸ் குழுவில் பதிவிட்ட பொழுது நடிகை வனிதாவின் பார்வைக்கும் சென்று எனை பாராட்டினார்.'42 வருடங்கள் கழிந்த பிறகும் எனது நடிப்பை பாராட்டி எழுதியதைப் படித்த பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது'என்றார்.

இதே போல் நடிகர்திலகமும் 'புதிய பறவை'திரைப்படத்தில் 'பார்த்த ஞாபகம் இல்லையோ'எனும் பாடலுக்கு அவர் கொடுக்கும் Expressions ஒவ்வொன்றும் அப்படியொரு அழகு.

இந்தக் காட்சியைப் பற்றி முன்பே நீண்டதாக எழுதியுள்ளேன்.

சே மணிசேகரன்

Leave a Reply