• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நுவரெலியாவில் அதிரடி போதைப்பொருள் சோதனை

இலங்கை

நேற்றைய தினம் நுவரெலியா நகரில் விசேட போதைப்பொருள் சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

நூடாளாவிய ரீதியல் இடம்பெற்று வரும் சோதனை நடவடிக்கை நுவரெலியா நகரிலும் நேற்றைய தினம் நுவரெலியா தலைமயக பொலிஸ் பிரேமலால் ஹெட்டியராச்சி தலைமையில் இடம்பெற்றது.

நுவரெலியா நகரை அண்டிய பிரதான பாடசாலைகளையும் , வர்த்தக நிலையங்களையும் பகுதிகளில் மோப்பநாய் கொண்டு சோதனை நடவடிக்கை இடம்பெற்றது.

நாட்டில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை கருத்திற்கொண்டு நுவரெலியா பகுதியல் இருக்கும் பாடசாலை மாணவர்களிடமும் சோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply