• Welcome to TamilsGuide
செய்திகள் 1

என்னையும், என் கணவரையும் பிரிக்க முயன்றனர் - பாடகி அனிதா குப்புசாமி

சினிமா

என்னையும், என் கணவரையும் பிரிக்க முயன்றனர்: பாடகி அனிதா குப்புசாமி: என்னுடைய கணவருக்கு உலகமே நான் தான். என்னை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்த மாட்டார்.
நாட்டுப்புறப் பாடல்களின் மூலம் தமிழ் இசையுலகில் புகழ்பெற்ற புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி தம்பதி சினிமாவிலும் பல பாடல்களை பாடியுள்ளனர்.
அண்மையில் அனிதா குப்புசாமி அளித்த பேட்டியில், 25 வயதுக்குப் பிறகு தான் என் கணவர் இசை கற்றுக்கொண்டார்.
குறைந்த காலத்தில் அவருடைய இசைஞானம் வளர்ந்ததற்கு அவருடைய கடினமான உழைப்பு தான் காரணம்.
என்னுடைய கணவருக்கு உலகமே நான் தான். என்னை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்த மாட்டார்.
சமூக வலைதளங்களில் என்னுடைய நிறத்தை, சாதியை விமர்சிக்கின்றனர்.
ஒரு மனைவிக்கு கணவனையும், கணவனுக்கு மனைவியையும் பிடிக்க வேண்டும். அதுதான் முக்கியம்.
எங்கள் இருவரையும் பிரிக்க பலர் முயற்சி செய்தனர். வெறும் அனிதா என்றால் என்னை யாருக்கும் தெரியாது.
அனிதா குப்புசாமி என்றால் தான் தெரியும். அந்தப் பெருமையைக் கொடுத்தது அவர்தான் என கூறியுள்ளார்.
திரைப்படத்துல வித்யாசாகர் தான் எனக்கு முதல்ல பாட வாய்ப்பு கொடுத்தாங்க. ’தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ தான் நான் பாடுன முதல் சினிமா பாட்டு. நான் எவ்ளோ சினிமா பாட்டு பாடினாலும் கச்சேரி போகும் போது சினிமா பாட்டு பாடுங்க சொல்லி யாருமே எங்களை கேட்டது இல்ல.

நான் ரொம்ப கஷ்டப்பட்டு பாதை போட்டிருக்கோம். ஆனா இப்போ மக்களிசை பாடல்களோட சாயல் மாறிட்டு வருது. எதிர்காலத்துல உண்மையான மக்களிசை பாடல்கள் எதுன்னு தெரியாம போயிடும். இவரோட பாடல்கள் கிராமத்து மக்களோட வாழ்க்கைய சொல்லக்கூடிய பாடல்கள். நம்ம கலாச்சாரத்துல நிறைய இருக்கு. நிறைய விட்டுட்டோம். இது ஒரு காலத்துல தேட வேண்டியதிருக்கும். என் கணவரோட நிறைய பாடல்கள் இன்னும் வெளிய வரல. அதெல்லாம் இனி ஒவ்வொன்னா வெளியேக் கொண்டு வருவோம் என்கிறார் அனிதா குப்புசாமி.

பிரசாந்த்

Leave a Reply