• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் அநுர குமார திசாநாயக்க

இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அநுர குமார திசாநாயக்க, புதிய இந்திய உயர்ஸ்தானிகர் Santosh Jha வை நேற்று பிற்பகல்  சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில், தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்கள், இலங்கையின் நடப்பு அரசியல் நிலவரங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக  கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத்தும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply