• Welcome to TamilsGuide
செய்திகள் 1

300 கிலோ கஞ்சா எரிப்பு

இலங்கை

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இன்று (24) காலை 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் (2023) வவுனியா மேல் நீதிமன்றத்தில் நிiவு செய்யப்பட்ட 12 வழக்குகளில் முன்னிலைப்படுத்தப்பட்ட 300கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா வவுனியா ஏ9 வீதி சாந்தசோலை பகுதியில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் , நீதிமன்ற பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எரிக்கப்பட்டது

சுகாதார நிலமைகளை கருத்தில் கொண்டு மக்கள் நடமாட்டம் மற்றும் அருகே வீடுகள் அற்ற பகுதியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கஞ்சா எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
 

Leave a Reply