• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் விபத்து – ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

இலங்கை

மன்னார் – யாழ்ப்பாணம் வீதியில் பள்ளமடு பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து அதே திசையில் பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த மற்றைய நபர் கோவில்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சவரி குளம் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். சடலம் மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply