• Welcome to TamilsGuide
செய்திகள் 1

13வது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும் – ஜனாதிபதி

இலங்கை

ஒவ்வொரு மாகாணமும் 13வது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது என்றும் அதேபோல் அதிகாரப் பகிர்வு என்பது ஒரு அரசியல் எண்ணக்கருவாக மாத்திரம் அன்றி, பொருளாதார அடிப்படையில் யதார்த்தமாக அமைய வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாகாண மட்டத்தில் சுயாதீன பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பிலான தெரிவை ஜப்பான், கொரியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply