• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ் சூழலை மாசுபடுத்திய ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகனம்

இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாணத்திற்கான நேற்றைய விஜயத்தின்போது அவரது பாதுகாப்பு வாகனம் ஒன்று கடும் புகையினை வெளியேற்றியவாறு சென்றதை அவதானிக்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் புகையினை வெளியேற்றும் போது தண்டங்களை விதிக்கும் பொலிஸார் ஏன் அரச வாகனங்களுக்கு அந்த நடைமுறைகளை பேணுவதில்லை என இவ்விடயம் குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவ்வாறு அதிகளவில் புகையை வெளிவிடும் வாகனங்களுக்கு எவ்வாறு புகைச்சான்றிதழ் வழங்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், அரசாங்க வாகனங்களுக்கு ஒரு சட்டமும் பொதுமக்களது வாகனங்களுக்கு ஒரு சட்டமும் இலங்கையில் காணப்படுகின்றதா என அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply