• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உயிருக்கு போராடிய காட்டு யானை உயிரிழப்பு

இலங்கை

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உயிருக்கு போராடிய காட்டு யானை நேற்று உயிரிழந்துள்ளது.

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் குறித்த காட்டு யானை நேற்று முன்தினம் காலை வீழ்ந்து கிடந்தது.

உணவு உற்கொள்ள முடியாமலிருந்த யானையினை மட்டக்களப்பு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்று பார்வையிட்டுச் சிகிச்சையளித்து பராமரித்து வந்த நிலையில் நேற்று காலை யானை உயிரிழந்தது.

இந்நிலையில் யானைக்கு அம்பாறை வனஜீவராசிகள் திணைக்களத்தின் வைத்தியர் நிஹால் புஷ்பகுமார தலைமையிலான குழுவினர் வருகை தந்து உடற்கூற்று பரிசோதனை மேற்கொண்டனர்.

குறித்த யானையானது துப்பாக்கி சூட்டு காயத்தினாலேயே நடக்க முடியாமல் வீழ்ந்துள்ளதாகவும், இதனால் உணவு உட்கொள்ள முடியாமல் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்தனர்.

இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவின் படி யானையினை அடக்கம் செய்யும் ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply