• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வவுனியாவில் இளைஞரின் உயிரைப் பறித்த எலிக் காய்ச்சல்

இலங்கை

எலிக்காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் கடந்த 30 ஆம் திகதி வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

செட்டிக்குளம், முகத்தான்குளத்தை சேர்ந்த  22 வயதான இளைஞரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

குறித்த இளைஞன் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply