மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் வம்புக்கு வந்த அருண் விஜய்..
சினிமா
சிவகார்த்திகேயன் அருண் விஜய் ஆகியோர் இடையே சில வருடங்களாக சண்டை இருந்து வந்தது எல்லோருக்கும் தெரியும்.
'யார் எல்லாம் மாஸ் பண்றது என விவஸ்தை இல்லாம போய்டுச்சு' என சிவகார்த்திகேயன் பற்றி அருண் விஜய் போட்ட ட்வீட் சர்ச்சை ஆனது.
அவர்கள் சண்டை ஒருகட்டத்தில் சமரசமும் ஆனது. இருவரும் மாறி மாறி ட்விட்டரில் பாராட்டவும் செய்தனர்.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அயலான் படம் வரும் ஜனவரி 12ம் தேதி பொங்கல் ஸ்பெஷல் ஆக ரிலீஸ் ஆக இருக்கிறது.
அதற்கு போட்டியாக தற்போது அருண் விஜய்யின் மிஷன் படம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவித்து இருக்கின்றனர்.
மீண்டும் அவர்கள் நேரடியாக மோதுவது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.